/உள்ளூர் செய்திகள்/சென்னை/தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இனி தப்ப முடியாது: ஏர்போர்ட் கஸ்டம்ஸ் பிரிவில் "காப்ஸ்'தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இனி தப்ப முடியாது: ஏர்போர்ட் கஸ்டம்ஸ் பிரிவில் "காப்ஸ்'
தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இனி தப்ப முடியாது: ஏர்போர்ட் கஸ்டம்ஸ் பிரிவில் "காப்ஸ்'
தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இனி தப்ப முடியாது: ஏர்போர்ட் கஸ்டம்ஸ் பிரிவில் "காப்ஸ்'
தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இனி தப்ப முடியாது: ஏர்போர்ட் கஸ்டம்ஸ் பிரிவில் "காப்ஸ்'
வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று, தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய உதவும், 'காப்ஸ் சாப்ட்வேர்' பயன்பாடு, சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதை கண்காணிக்க, நாட்டில் உள்ள ஒவ்வொரு சர்வதேச விமான நிலையத்திலும், கஸ்டம்ஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் யாராவது, கடத்தலில் ஈடுபடுகிறார்களா, வரிவிதிப்பிற்கு உள்ளான, தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகின்றனரா என்பதை கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். கடத்தல் செய்வோரை பிடித்து, பொருட்களை பறிமுதல் செய்து, அபராதமோ, தண்டனையோ விதிக்கின்றனர். இருப்பினும், கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்கின்றனர். கடந்தாண்டு வரை, ஒருமுறை பிடிபட்டவர், அடுத்த முறையும் பிடிபடும் போது அவர் குறித்த, முந்தைய குற்றங்கள், தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அடிக்கடி வெளிநாடு செல்லும் கடத்தல்காரர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்து, அவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 'காப்ஸ்' என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் உருவாக்கப்பட்டது. அடிக்கடி வெளிநாடு செல்வோர், வெளிநாடுகளில் குறைந்த நாட்களே இருந்துவிட்டு தாயகம் திரும்புவோர், கடத்தல்காரர்கள் மற்றும் அவர்கள் அதுநாள் வரை செய்த குற்றங்கள் ஆகிய தகவல்கள், இந்த சாப்ட்வேரில் சேமிக்கப்பட்டன. நாட்டிலேயே முதன் முதலாக, 'காப்ஸ்' சாப்ட்வேர் சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.'காப்ஸ் சாப்ட்வேர்' கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, இந்த சாப்ட்வேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயணி, விமானத்தைவிட்டு இறங்கி, கஸ்டம்ஸ் பிரிவுக்கு வந்ததும் அவரின் பாஸ்போர்ட் எண்ணை மட்டும் கம்ப்யூட்டரில் தட்டினால் போதும்.
அந்த பயணி, அதுவரை எத்தனை முறை வெளிநாட்டிற்கு சென்றுள்ளார், கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா, அப்படி என்றால், அவர் மீது எத்தனை குற்றங்கள் பதிவாகியுள்ளன, என்னென்ன தண்டனை பெற்றுள்ளார் என்பது உள்ளிட்ட ஒட்டு மொத்த தகவல்களும் ஒரு நொடியில் திரையில் தெரியும். அதை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காப்ஸ் சாப்ட்வேர் அறிமுகம், கடத்தல்காரர்கள் குறித்த கண்காணிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பாராட்டு!சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவு, 'காப்ஸ் சாப்ட்வேரை' வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதை, மத்திய எக்சைஸ் மற்றும் கஸ்டம்ஸ் வாரியம் பாராட்டியுள்ளது.
மேலும், கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ள ஒரு ஆணையில், ''கடத்தல்காரர்கள் குறித்த தகவல்களை முறைப்படி சேகரித்து, அதை கொண்டு அவர்களை கண்காணிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை, பல விமான நிலையங்கள் செயல்படுத்தவில்லை.சென்னை விமான நிலையம் அதை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. வரும், 30ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் கஸ்டம்ஸ் அதிகாரிகள், சென்னையை பின்பற்றி, தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் சேகரித்து வைக்க வேண்டும்,'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- எஸ்.உமாபதி -


