Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரேஷன் கடையில் அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் வழங்க கோரிக்கை

ரேஷன் கடையில் அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் வழங்க கோரிக்கை

ரேஷன் கடையில் அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் வழங்க கோரிக்கை

ரேஷன் கடையில் அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் வழங்க கோரிக்கை

ADDED : ஜூலை 13, 2011 11:42 PM


Google News

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் ரேஷன் கடைகளில் அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து பரங்கிப்பேட்டை நகர இந்திய தவ்ஹீத் ஜமா அத் செயலர் முகமது பிலால் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

பரங்கிப்பேட்டை சலங்காரத்தெரு ரேஷன் கடைக்குட்பட்ட அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் கிடைப்பதில்லை.

மாதத்தில் சில நாட்கள் மட்டும் சர்க்கரை, பாமாயில் போடப்படுவதால் முண்டியடித்துக் கொண்டு பல மணிநேரம் வரிசையில் நின்று வாங்குபவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை.இதுகுறித்து சிதம்பரம் குடிமை பொருள் தாசில்தாரிடம் புகார் செய்தும் அவர் குறைவாகதான் அனுப்புகிறோம் என கூறுகிறார். இதனால் அனைவருக்கும் சர்க்கரை, பாமாயில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us