ADDED : செப் 07, 2011 12:23 AM
புதுச்சேரி : சங்க இலக்கியத்திற்கு உரை எழுதிய பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் பிறந்த நாள் மற்றும் படத்திறப்பு விழா ரெவேய் சொசியால் சங்கத்தில் நடந்தது.
புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் நேற்றுமுன்தினம் நடந்த விழாவிற்கு பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி முனைவர் விசயவேணுகோபால் தலைமை தாங்கினார். புலவர்கள் திருநாவலன், நாகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முனைவர் ழான் லூய்க் சேவியர் பங்கேற்று, புலவர் சோமசுந்தரனாரின் படத்தை திறந்து வைத்தார்.திருச்சிராப்பள்ளி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இளங்குமரனார் சிறப்புரையாற்றினார். முனைவர் மணி நன்றி கூறினார்.நிகழ்ச்சியை தமிழாசிரியர் பூங்குன்றன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை முனைவர் இளங்கோவன் செய்திருந்தார்.


