மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் மையம்
மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் மையம்
மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் மையம்
ADDED : ஜூலை 13, 2011 10:30 PM
தேவதானப்பட்டி : மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகுளம் வராகநதியில் வரும் நீர் மூலம் மேல்மங்கலம், வடுகபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரண்டு போக நெல்சாகுபடி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்டனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கு 3 மாதங்கள் கழித்து பணம் கொடுத்தனர். இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் 10 நாட்களில் அறுவடைக்கு தாயாராக உள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன்கருதி மேல்மங்கலத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை மெசின் மூலம் தூற்றி கொள்வதற்கும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


