Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அண்ணனை கொலை செய்த தம்பி கைது

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

ADDED : ஜூலை 13, 2011 11:45 PM


Google News

முதுநகர்:சொத்துக்காக அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன்கள் சண்முகவேல் 27, சண்முகசுந்தரம் 24. சகோதர்களான இவர்களின் தந்தை சின்னதுரை மூன்று அண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் இவர்களுக்கு சொந்தமான பூர்வீக வீட்டை பங்கிடுவது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த சண்முகசுந்தரம், வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அண்ணன் சண்முகவேலுவை தடியால் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த சண்முகவேலு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து சொத்துக்காக அண்ணனை கொலை செய்த சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us