ADDED : அக் 12, 2011 10:47 AM
புதுடில்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமர்சிங் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை அமர்சிங்கிற்கு ஏற்பட்டுள்ளது.


