/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சரத்குமார் மீது போலீஸ் வழக்குப்பதிவுசரத்குமார் மீது போலீஸ் வழக்குப்பதிவு
சரத்குமார் மீது போலீஸ் வழக்குப்பதிவு
சரத்குமார் மீது போலீஸ் வழக்குப்பதிவு
சரத்குமார் மீது போலீஸ் வழக்குப்பதிவு
ADDED : அக் 13, 2011 05:38 AM
தூத்துக்குடி: சமக., நிறுவனர் சரத்குமார், மாவட்ட செயலாளர் சுந்தர்,
அதிமுக., மேயர் வேட்பாளர் சசிகலாபுஷ்பா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு
செய்தனர்.தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித்
தேர்தல் நடக்கிறது.
கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக
பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிமுக., மாநகர மேயர்
வேட்பாளர் சசிகலா புஷ்பாவை ஆதரித்து சமக., தலைவர் சரத்குமார் தூத்துக்குடி
நகரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அவருடன் சமக., மாவட்ட செயலர்
சுந்தர், அதிமுக., வேட்பாளர் சசிகலா புஷ்பா ஆகியோர் சென்ற காரை பின்
தொடர்ந்து பல கார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில்
புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறி
சுமார் 10க்கும் மேற்பட்ட கார்களில் சென்றதாக தூத்துக்குடி வடபாகம்,
மத்தியபாகம், தென்பாகம், தாளமுத்துநகர் போன்ற போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.


