/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சங்கம்பட்டி பஞ்., யூனியன் பள்ளியில் "வைர விழா'சங்கம்பட்டி பஞ்., யூனியன் பள்ளியில் "வைர விழா'
சங்கம்பட்டி பஞ்., யூனியன் பள்ளியில் "வைர விழா'
சங்கம்பட்டி பஞ்., யூனியன் பள்ளியில் "வைர விழா'
சங்கம்பட்டி பஞ்., யூனியன் பள்ளியில் "வைர விழா'
ADDED : செப் 16, 2011 12:26 AM
துறையூர்: துறையூர் அருகே சங்கம்பட்டியிலுள்ள பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில் வைரவிழா (60ம் ஆண்டு) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியை ஜோதி தியாகராஜன் தலைமை வகித்தார். கூடுதல் ஏ.இ.ஓ., ஜோசப் அன்ட்ரோரெக்ஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சித்ரா வரவேற்றார். ஆசிரியை உஷாராணி ஆண்டறிக்கை வாசித்தார். ஏ.இ.ஓ., குமார், மேற்பார்வையாளர் நடராஜன், பஞ்சாயத்து தலைவர் மோகன்தாஸ், பி.டி.ஏ., தலைவர் பாண்டியன், எல்.ஐ.சி., முகவர் காமராஜ், கவுன்சிலர் பொம்மன், அரசு ஊழியர்கள் தங்கவேல், செல்வராஜ், ஆறுமுகம், குப்புசாமி, முன்னாள் மாணவர்கள் சதாசிவம், ராமராஜ், துரைராஜ் வாழ்த்தினர். விழாவில், திருச்சி தென்னக ரயில்வேயில் பணிபுரியும் பழைய மாணவர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சி தேசிய கல்லூரி உதவி பேராசிரியர் 'கல்வி என்னும் கலங்கரை விளக்கம்' எனும் தலைப்பிலும், தஞ்சை கவிஞர் தாமு நல்லா படிக்கணும் எனும் தலைப்பிலும், சென்னை பள்ளி துணை முதல்வர் பூங்கோதை பேசினர். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சி, பொன்னமராவதி விசித்ரா, ஜெகதாம்பாள் குழுவினரின் தவில், நாதஸ்வர நாட்டியம், பல்சுவை கிராமிய கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. விழாவை பள்ளி உதவி ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். உதவி ஆசிரியை ராதா நன்றி கூறினார்.


