/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பி.எஸ்.என்.எல்., ஊழியர் அதிகாரிகள் சங்கம் உண்ணாவிரதம்பி.எஸ்.என்.எல்., ஊழியர் அதிகாரிகள் சங்கம் உண்ணாவிரதம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் அதிகாரிகள் சங்கம் உண்ணாவிரதம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் அதிகாரிகள் சங்கம் உண்ணாவிரதம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் அதிகாரிகள் சங்கம் உண்ணாவிரதம்
ADDED : செப் 28, 2011 11:34 PM
தர்மபுரி: பி.எஸ்.என்.எல்., ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்டத் தலைவர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். உதவி தலைவர் பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகிரிசாமி வரவேற்றார். மாநில பொருளாளர் ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 'பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில் வி.ஆர்.எஸ்.,ஐ ரத்து செய்ய வேண்டும். இன்சென்டிவ் வழங்க வேண்டும். 78.2 சதம் பஞ்சப்படியை ஊதியத்தில் இணைத்து வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் வித்யாசாகர், டெப்பூ சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்மாசி, மாவட்ட செயலாளர் அழகிரிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


