/உள்ளூர் செய்திகள்/தேனி/70 நகராட்சிகளில் கமிஷனர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நகராட்சி அலுவலர் சங்கம் குற்றச்சாட்டு70 நகராட்சிகளில் கமிஷனர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நகராட்சி அலுவலர் சங்கம் குற்றச்சாட்டு
70 நகராட்சிகளில் கமிஷனர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நகராட்சி அலுவலர் சங்கம் குற்றச்சாட்டு
70 நகராட்சிகளில் கமிஷனர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நகராட்சி அலுவலர் சங்கம் குற்றச்சாட்டு
70 நகராட்சிகளில் கமிஷனர் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நகராட்சி அலுவலர் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : செப் 29, 2011 12:43 AM
கம்பம் : தமிழகம் முழுவதும் 70 நகராட்சிகளில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது என தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.இச்சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நகராட்சி பணியாளர்கள், தங்களின் வழக்கமான பணிகளை பார்க்க முடியவில்லை.
தேர்தல் பணிகளுக்கென, 150 உதவியாளர்கள் நியமிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் 70 நகராட்சிகளில், கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு பொறியாளர்களை வைத்து தேர்தல் நடத்த உள்ளனர். இது சரியான நடைமுறை அல்ல. ஒவ்வொரு நகராட்சிக்கும் தேர்தல் பணிக்கென ஒரு உதவியாளர், காலியாக உள்ள கமிஷனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


