தே.மு.தி.க., தீவிர ஓட்டு சேகரிப்பு
தே.மு.தி.க., தீவிர ஓட்டு சேகரிப்பு
தே.மு.தி.க., தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : அக் 12, 2011 01:10 AM
திட்டக்குடி : அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை மறந்து தே.மு.தி.க.,
வேட்பாளர்களின் வெற்றிக்காக தொண்டர்கள் தீவிரமாக ஓட்டு சேகரிப்பில்
ஈடுபடுகின்றனர் என தே.மு.தி.க., வேட்பாளர் தெரிவித்தார்.
திட்டக்குடி
பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு. தி.க., வேட்பாளர்
வினாயகம் விடுத்துள்ள அறிக் கையில், தே.மு.தி.க., தொண்டர்கள் அ.தி.மு.க.,
வுடனான கூட்டணியை மறந்து நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்தரவுபடி தே.மு.தி.க.,
சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர ஓட்டு
சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.வேட்பாளர்
வினாயகம் திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் ஓட்டு
சேகரித்தார். கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சக்திவேல், மணிமாறன் உட்பட பலர்
உடனிருந்தனர்.


