/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அனுமதியின்றி களிமண் 2 டிராக்டர்கள் பறிமுதல்அனுமதியின்றி களிமண் 2 டிராக்டர்கள் பறிமுதல்
அனுமதியின்றி களிமண் 2 டிராக்டர்கள் பறிமுதல்
அனுமதியின்றி களிமண் 2 டிராக்டர்கள் பறிமுதல்
அனுமதியின்றி களிமண் 2 டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : செப் 10, 2011 03:16 AM
கடலூர் : கடலூர் அருகே அனுமதியின்றி களிமண் ஏற்றிச் சென்ற இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கடலூர் தாசில்தார் அசோகன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆண்டார்முள்ளிப்பள்ளம் சாலையில் வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் டிராக்டர் பதிவு எண் இல்லாமலும், அனுமதியின்றி களிமண் ஏற்றி சென்றதும் தெரியவந்தது.மேலும் விசாரணையில் டிராக்டர் டிரைவர்கள் காயல்பட்டைச் சேர்ந்த பெருமாள், சவுரிராஜன் எனவும் தெரியவந்தது. உடன் இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஆர்.டி.ஒ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


