ADDED : செப் 08, 2011 10:22 PM
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து குளிர் அதிகரித்துள்ளது.
சில வாரங்களாக நீடித்த கனமழை அதை தொடர்ந்து சாரல் மழையாக பெய்தது. இதுவரை 310 ச்மி.மீ., மழை பதிவாகியுள்ள நிலையில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் காற்று வீசி காலை, மாலையில் பனிப் பொழிவால் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இத்தகைய நிலையால் மலைப்பகுதியில் பெரும்பகுதியினர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


