/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரேஷனில் உளுந்தம் பருப்பு சப்ளை இல்லைரேஷனில் உளுந்தம் பருப்பு சப்ளை இல்லை
ரேஷனில் உளுந்தம் பருப்பு சப்ளை இல்லை
ரேஷனில் உளுந்தம் பருப்பு சப்ளை இல்லை
ரேஷனில் உளுந்தம் பருப்பு சப்ளை இல்லை
ADDED : செப் 24, 2011 10:05 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு சப்ளை இல்லாததால், மக்கள் பாதிக்கின்றனர்.
ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட மளிகை சாமான்கள் விற்பனை செய்யப்படுகிறது. இம்மாதம் வழங்க வேண்டிய உளுந்தம் பருப்பு வழங்கவில்லை. உணவு பொருள் வழங்கல் துறையினர்,' இருப்பு இல்லாததால், இம்மாதம் வழங்க வில்லை,' என்றனர். இதனால், ரேஷன் கடைகளில் கிலோ ரூ.30 க்கு உளுந்தம் பருப்பு வாங்கிய மக்கள், வெளி மார்க்கெட்டில் ரூ. 95 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்படுகின்றனர்.


