UPDATED : அக் 11, 2011 09:27 AM
ADDED : அக் 10, 2011 08:25 PM
புதுடில்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்கு அன்னா ஹசாரே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தொழில்நுட்ப உலகில் இணையில்லாத பங்களிப்புக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார். அவரது மறைவுச் செய்தி வருத்தமளித்தது என்று கூறினார். உண்ணாவிரதம் இருந்த போது லோக்பால் தொடர்பாக பார்லிமென்டில் நடந்த விவாதத்தை ஐபேடில் அன்னா தொடர்ந்து வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


