/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஐ.ஏ.எஸ்., அகாடமி உருவாக்குவேன் :தி.மு.க., வேட்பாளர் பாக்கியநாதன் பேச்சுஐ.ஏ.எஸ்., அகாடமி உருவாக்குவேன் :தி.மு.க., வேட்பாளர் பாக்கியநாதன் பேச்சு
ஐ.ஏ.எஸ்., அகாடமி உருவாக்குவேன் :தி.மு.க., வேட்பாளர் பாக்கியநாதன் பேச்சு
ஐ.ஏ.எஸ்., அகாடமி உருவாக்குவேன் :தி.மு.க., வேட்பாளர் பாக்கியநாதன் பேச்சு
ஐ.ஏ.எஸ்., அகாடமி உருவாக்குவேன் :தி.மு.க., வேட்பாளர் பாக்கியநாதன் பேச்சு
ADDED : அக் 13, 2011 01:06 AM
மதுரை : ''ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உருவாக்க, மாநகராட்சி சார்பில் ஐ.ஏ.எஸ்.,
பயிற்சி அகாடமி அமைக்கப்படும்,'' என, மதுரை தி.மு.க., மேயர் வேட்பாளர்
பாக்கியநாதன் பேசினார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க.,
ஆட்சியில் மதுரை புறக்கணிக்கப்பட்டதற்கு, நிறைய ஆதாரங்கள் உள்ளன.
மாநகராட்சி நிர்வாகத்தில் தி.மு.க., இருந்த காலத்தில் தான், பாலங்கள்,
ஐகோர்ட், மாவட்ட கோர்ட், நான்கு வழிச்சாலை, மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்
உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., அரசு
புறக்கணித்த செல்லூர் ரயில்வே மேம்பாலம் திட்டத்தை, தி.மு.க., அரசு
நிறைவேற்றியது. கடந்த 15 ஆண்டாக மாநகராட்சி நிர்வாகத்தில் பங்கேற்ற அனுபவம்
இருப்பதால், மக்களின் தேவைகள், நிர்வாக சீர்திருத்தம் குறித்து, நன்கு
அறிவேன். மதுரையில் நிறைய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாக, மாநகராட்சி
சார்பில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமி ஏற்படுத்தப்படும். நிர்வாகம்
சட்டரீதியாக முறைப்படுத்தப்படும். ஏழைகளுக்கு பாதாள சாக்கடை திட்ட
பராமரிப்பு கட்டணம் பாதியாக குறைக்கப்படும், என்றார்.


