Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'

"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'

"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'

"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
சரவணம்பட்டி : ''மாணவர்களின் மனதை புண்படுத்துவராக ஆசிரியர் இருக்கக்கூடாது; மனதை பண்படுத்துபவராக இருக்க வேண்டும்,'' என, கல்லூரியில் நடந்த மாணவர் பேரவை துவக்க விழாவில் கவிதாசன் பேசினார்.

கோவை, சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி.,கல்வியியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா நடந்தது. . நிர்வாக அறங்காவலர் சாந்தி தங்கவேலு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் வரவேற்றார். கல்லூரி சேர்மன் தங்கவேலு தலைமை வகித்து,பேசுகையில்,''ஒவ்வொரு நிமிடமும் செய்திகளையும், கல்வியையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்; அறியாமல் விட்டுவிட்டால், நம்மை யாரும் அறியமாட்டார்கள். காணமல் போய்விடுவோம்,'' என்றார். ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன் பேசியதாவது: ஆசிரியர் பணி, அர்ப்பணிப்பு பணி. ஆசிரியர் வழிகாட்டியாக அல்ல, நல்லவராக வாழ்ந்து காட்ட வேண்டும். மாணவர்களை புண்படுத்துவராக இருக்கக்கூடாது; அவர்களின் மனதை பண்படுத்துபவராக இருக்க வேண்டும். இன்றைய வேலையை இன்றே முடிப்பவன் சாதாரண மனிதன்; நாளைய வேலையை இன்றே முடிப்பவன் மட்டுமே சாதனையாளன். தவறே செய்யாத மனிதன் இல்லை; தவறே செய்து கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.இவ்வாறு, கவிதாசன் பேசினார்.மாணவர் பேரவை தலைவராக சந்திரசேகர், துணைத்தலைவராக நல்லாசாமி, செயலராக மரியபுஷ்பம், இணைச் செயலராக மனோஜ் உள்ளிட்டோர் தேர்வு பெற்றனர். மாணவர்கள், கடமையை சரிவர செயலாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us