Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.2.41லட்சத்தை ஒப்படைக்க மனு : வருமான வரித்துறையினர் தாக்கல்

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.2.41லட்சத்தை ஒப்படைக்க மனு : வருமான வரித்துறையினர் தாக்கல்

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.2.41லட்சத்தை ஒப்படைக்க மனு : வருமான வரித்துறையினர் தாக்கல்

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.2.41லட்சத்தை ஒப்படைக்க மனு : வருமான வரித்துறையினர் தாக்கல்

ADDED : ஜூலை 26, 2011 12:52 AM


Google News

மதுரை : மதுரை நாராயணபுரத்தில் சட்டசபை தேர்தலின் போது, வாக்காளர்களுக்காக வழங்க இருந்த ரூ.2.41 லட்சத்தை ஒப்படைக்க கோரி, வருமான வரித்துறை துணை இயக்குனர் சுந்தரேசன் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார்.

மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் கருப்பணன். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சோதனையிட்டு, ரூ.2.41 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வருமான வரி அலுவலர் கோவர்த்தனன் நடத்திய விசாரணையின் போது, அந்த பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்பணமாக கிடைத்தது என கருப்பணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், அந்த பணம் ஊமச்சிகுளம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட் கஸ்டடியில் உள்ளது. வருமான வரி குறித்து கணக்கிட வேண்டியிருப்பதால், அந்த பணத்தை ஒப்படைக்க கோரி, துணை இயக்குனர் சுந்தரேசன், வக்கீல் வேலுச்சாமி மூலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார். மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us