ADDED : செப் 08, 2011 11:44 PM
திட்டக்குடி : பெண்ணாடத்தில் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞரைத் தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் மாளிகை கோட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு. வழக்கறிஞர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜாகீர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதிபாசு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஜாகீர் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தாக்கினர். இதில் ஜோதிபாசு படுகாயமடைந்தார். புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து ஜாகீர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


