/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முஸ்லிம் மக்கள் கழகம் முதல்வர் ஜெ.,க்கு பாராட்டுமுஸ்லிம் மக்கள் கழகம் முதல்வர் ஜெ.,க்கு பாராட்டு
முஸ்லிம் மக்கள் கழகம் முதல்வர் ஜெ.,க்கு பாராட்டு
முஸ்லிம் மக்கள் கழகம் முதல்வர் ஜெ.,க்கு பாராட்டு
முஸ்லிம் மக்கள் கழகம் முதல்வர் ஜெ.,க்கு பாராட்டு
ADDED : ஜூலை 25, 2011 11:33 PM
திண்டிவனம் : திண்டிவனம் ராஜராஜன் திருமண மண்டபத்தில் முஸ்லிம் மக்கள் கழக மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.சையத் அமீர் தலைமை தாங்கினார்.
சிராஜ் பேகம்,ஆயிஷா பீ முன்னிலை வகித்தார். கட்சி நிறுவனர் ஜைனுதீன், நிர்வாகிகள் சாதிக் பாஷா, பதுருன்னிசா உட்பட பலர் பேசினர். விழுப்புரம் மாவட்டத்தில் நகர் புறத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவித்த முதல்வர் ஜெ.,க்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.அவனம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு சுடுகாடு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நகர தலைவர் அலாவுதீன் நன்றி கூறினார்.


