/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முதியோர் இல்லத்தில் மாணவிகள் கலைநிகழ்ச்சிமுதியோர் இல்லத்தில் மாணவிகள் கலைநிகழ்ச்சி
முதியோர் இல்லத்தில் மாணவிகள் கலைநிகழ்ச்சி
முதியோர் இல்லத்தில் மாணவிகள் கலைநிகழ்ச்சி
முதியோர் இல்லத்தில் மாணவிகள் கலைநிகழ்ச்சி
ADDED : செப் 04, 2011 11:28 PM
திண்டிவனம் : திண்டிவனம் முதியோர் இல்லத்தில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
திண்டிவனம் இந்திரா காந்தி ஜெயந்தி மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மற்றும் ஜெ.ஆர்.சி., மூலம் கடந்த 19ம் தேதி முதல் சத்பவன் திவாஸ் நிகழ்ச்சி நடந்தது வருகிறது. இதற்காக கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழச்சிகளிலும் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அன்னை கருணாலயா முதியோர் இல்லத்திற்கு சென்று கல்லூரி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நாட்டு ஒற்றுமை, நகைச்சுவை, பண்பாடு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஜெ.ஆர். சி., அலுவலர்கள் விஜயலட்சுமி, ஜெயந்தி, என். எஸ்.எஸ்.,அலுவலர் ஜெயந்தி செய்திருந்தனர்.


