Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/விபத்தில் ஊழியர் பலி: ரூ.14 லட்சம் நஷ்டஈடு

விபத்தில் ஊழியர் பலி: ரூ.14 லட்சம் நஷ்டஈடு

விபத்தில் ஊழியர் பலி: ரூ.14 லட்சம் நஷ்டஈடு

விபத்தில் ஊழியர் பலி: ரூ.14 லட்சம் நஷ்டஈடு

ADDED : அக் 05, 2011 12:48 AM


Google News

மதுரை : மதுரையில் லாரி மோதி பலியான மாநகராட்சி ஊழியருக்கு ரூ.14 லட்சம் நஷ்டஈடு வழங்க, ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது.

கீரைத்துறையை சேர்ந்த மல்லையன். இவர் மாநகராட்சியின் ரோடு பராமரிப்பு ஊழியர். 2009 நவ.,9ல் சைக்கிளில் தத்தனேரி ரோட்டில் சென்றார். அவர் மீது லாரி மோதியதில் பலியானார். லாரிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி, முதலாவது விரைவு கோர்ட்டில் மல்லையன் மனைவி சுப்புதாய், மகன்கள் மனோகரன், சின்னையன், அழகர் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்களுக்கு ரூ.14 லட்சத்து 10 ஆயிரத்து 880 நஷ்டஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி டி.பொன்பிரகாஷ் உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us