/உள்ளூர் செய்திகள்/சேலம்/வீரப்பன் மனைவி பேட்டி வித்யாராணியின் கணவர் நல்லவர் இல்லைவீரப்பன் மனைவி பேட்டி வித்யாராணியின் கணவர் நல்லவர் இல்லை
வீரப்பன் மனைவி பேட்டி வித்யாராணியின் கணவர் நல்லவர் இல்லை
வீரப்பன் மனைவி பேட்டி வித்யாராணியின் கணவர் நல்லவர் இல்லை
வீரப்பன் மனைவி பேட்டி வித்யாராணியின் கணவர் நல்லவர் இல்லை
ADDED : அக் 05, 2011 02:25 AM
சேலம்: ''என் மகள் வித்யாராணியின் கணவர் மரியதீபக் வேலையில்லாமல் ஊர்
சுற்றிக் கொண்டிருக்கிறார்,'' என, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார்.
சேலத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:என்னுடைய மகள் வித்யாராணியின்
திருமண வாழ்க்கைக்கு எதிராக நான் இருப்பது போன்ற செய்திகளை மரியதீபக்கும்,
மகள் வித்யாராணியும் கூறி வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பானது. நான்
சிறையில் இருந்தபோது, வித்யாராணி படிப்புக்கு, சில பெரிய மனிதர்கள் உதவி
செய்து வந்தனர். சென்னையில் படித்து வந்த வித்யாராணிக்கும்,
மரியதீபக்குக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நண்பராக பழகிய
மரியதீபக், வித்யா ராணியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து
செலவழித்துள்ளார். மேலும், சிறையில் இருந்த சமயத்தில், என்னுடைய வழக்கு
செலவுக்கு எனக் கூறி, சில பிரமுகர்களிடம் பணம் வாங்கியுள்ளார். வித்யாராணி
வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற நகைகளை மரியதீபக் விற்று
செலவழித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது.
அவர்களது பெயர்களை காலம் வரும்போது வெளிப்படுத்துவேன். மரியதீபக் தகுதியான
நபர் இல்லை. வேலையில்லாமல் ஊர் சுற்றுகிறார்.
ஏற்கனவே ஒரு முறை, மரியதீபக்
எனக்கு தொல்லை கொடுக்கிறார் என, வித்யாராணி சொன்னதன் பேரில், மாவட்ட
எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். இடைப்பட்ட காலத்தில்,
வித்யாராணியின் மனதை மாற்றி, நீதிமன்றம் மூலமாக மரியதீபக் அழைத்து
சென்றுள்ளார்.மரியதீபக்கை பொறுத்தமட்டில், அவர் தகுதியான வேலையுடன்
வரவேண்டும். வித்யாராணி படிப்புக்கு யாரும் என்னுடைய அனுமதியில்லாமல்
இனிமேல் உதவி செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


