Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ. 3 லட்சத்தில் கட்டிய தொட்டி 6 ஆண்டுகளில் விழும் அபாயம்

ரூ. 3 லட்சத்தில் கட்டிய தொட்டி 6 ஆண்டுகளில் விழும் அபாயம்

ரூ. 3 லட்சத்தில் கட்டிய தொட்டி 6 ஆண்டுகளில் விழும் அபாயம்

ரூ. 3 லட்சத்தில் கட்டிய தொட்டி 6 ஆண்டுகளில் விழும் அபாயம்

ADDED : ஜூலை 27, 2011 12:57 AM


Google News
ஈரோடு : காசிபாளையம் நகராட்சியில், 3.6 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆறு ஆண்டுகளில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

ஈரோடு காசிபாளையம் நகராட்சி 20வது வார்டு அண்ணாநகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. நீண்டகாலமாக தண்ணீர் தட்டுப்பாட்டால், அவதிக்குள்ளான மக்களின் வேண்டுகோளை ஏற்று, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. 2003 -2004ல் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 3.6 லட்சம் ரூபாயில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பம்ப் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு, அண்ணாநகர் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு மேலாக, இத்தொட்டியில் தண்ணீர் கசிகிறது. சுற்றி வர ஒரே நேர்க்கோடாக கசிவதால், தொட்டியில் முக்கால் உயரத்துக்கே தண்ணீர் நிரப்பப்படுகிறது. எனினும், மற்றொரு பகுதியில் அதிகளவில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் எவரும், தண்ணீர் தொட்டியின் அருகே செல்லவே அஞ்சுகின்றனர். நீர்க்கசிவு அதிகமாவதால், விரைவில் தொட்டி விழுந்துவிடும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதுபற்றி காசிபாளையம் நகராட்சியில் பல முறை புகார் தெரிவித்து விட்டனர். எந்தவித பயனும் இல்லை. ஆறு ஆண்டுகளில், விழக்காத்திருக்கும் தொட்டியை கட்டியவர்கள் மீது தக்க நடவடிக்கையும், இடிந்து விழும் முன் தொட்டியை சரிசெய்யவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us