/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நிலக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள்நிலக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள்
நிலக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள்
நிலக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள்
நிலக்கோட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள்
ADDED : செப் 06, 2011 10:26 PM
நிலக்கோட்டை : நிலக்கோட்டை பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்க, போலீசார் நடவடிக்கை மெத்தனமாக உள்ளது, என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நிலக்கோட்டை, கொடைரோடு பகுதியில், சமீப காலங்களாக வீடு புகுந்து திருடுபவர்கள், இரு சக்கரவாகனங்களில் வந்து பெண்களிடம் சங்கிலி திருடுபவர்கள் அதிகரித்து உள்ளனர். சென்ற மாதத்தில் மட்டும் தங்கம் பொன் பட்டறை உரிமையாளர் பார்த்தமணி வீட்டில் கொள்ளை முயற்சி, குல்லிசெட்டிபட்டி கோயிலில் உண்டியல் திருட்டு, மணியாரன்பட்டியில் இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 13 பவுன் தாலி சங்கிலி பறிப்பு, நிலக்கோட்டை பெரியகாளியம்மன் கோயில் தெருவில் மூன்று வீடுகளில் தொடர் திருட்டு என தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த ஆறு மாதங்களில் இருபத்தி ஐந்து திருட்டுகளுக்கு மேல் நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகி உள்ளது. இவை தவிர வழக்குபதிவு செய்யாமல் போலீசார் 'சரிகட்டிய' திருட்டு, கொள்ளை சம்பவங்களும் உண்டு. நிலக்கோட்டை ஸ்டேஷனில் மட்டும் இத்தனை வழக்குகள் என்றால், நிலக்கோட்டை சப்-டிவிஷனில் மீதமுள்ள ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களையும் சேர்த்தால், திருட்டு வழக்குகள் நூறுக்கு மேல் நிலுவையில் உள்ளது. திருட்டு வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர், இதுவரை ஒரு திருடரை கூட பிடிக்கவில்லை, திருட்டு பொருட்களும் மீட்கப்படவில்லை.


