Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம்: ஒப்பந்தம் கையெழுத்து

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம்: ஒப்பந்தம் கையெழுத்து

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம்: ஒப்பந்தம் கையெழுத்து

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம்: ஒப்பந்தம் கையெழுத்து

ADDED : ஜூலை 19, 2011 11:00 PM


Google News

வால்பாறை : தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, முழு சம்பள பலனுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, மாஞ்சோலை, வயநாடு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. மாநிலத்திலுள்ள தேயிலை, காபி எஸ்டேட்டுகளில் மட்டும் 1.5 லட்சம் தோட்டத்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.134.60 வழங்கப்படுகிறது. ஆனால் ரூ.104 க்கு மட்டுமே பணப்பலன் கிடைக்கிறது. மீதமுள்ள ரூ.30.60 க்கு எந்த பலனும் இல்லாமல், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலின் போது, தேர்தலில் வெற்றி பெற்றால் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்துக்கான முழு பணப்பலன்களுடன் கூடிய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க., வாக்குறுதியளித்திருந்தது.இதையடுத்து, கோவையில் தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் ஜெயசீலன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், நிர்வாகத்தின் சார்பில் தோட்ட அதிபர் சங்கத்தலைவர் ஸ்ரீதர், செயலாளர் ராம்குமார், ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தலைவர் சதாசிவம், துணைத்தலைவர் பாலசந்தர், நீலகிரி, வயநாடு தோட்ட அதிபர் சங்கத்தலைவர் நவீன்மதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொழிற்சங்கத்தின் சார்பில் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தலைவர் அமீது, விஜயகுமார், சலாவுதீன் (ஏ.டி.பி.,), கருப்பையா, முகம்மதுபாலன், ராஜூ (ஐ.என்,டி.யு.சி.,), சிங்காரவேலு, மகாளியப்பன் (எல்.பி.எப்.,) பாலகிருஷ்ணன், மோகன் (ஏ.ஐ.டி.யு. சி.,), சுரேஷ் (சி.ஐ.டி.யு.,) உட்பட அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் பங்கேற்றனர். ஒப்பந்தப் பேச்சில் தேயிலை தோட்ட தொழி லாளர்கள் தற்போது வாங்கும் சம்பளம் ரூ.134.60க் கான முழு பணப்பலன்களோடு 1.6.2011 முதல் வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் 2013 வரை நீடிக்கும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. 'ரூ.6.40 கோடி கிடைக்கும்' அ.தி.மு.க., தொழிற்சங்கத்தலைவர் அமீது, வால்பாறை எம்.எல். ஏ., ஆறுமுகம் ஆகியோர் கூறியதாது: தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.300 வழங்க வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். புதிய ஒப்பந்தப்படி பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் பணிபுரியும் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 6 கோடியே 40 லட்சம் வரை வழங்கப்படும், என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us