Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆலங்குளம் அருகே மணல் சரிந்து இருவர் பலி

ஆலங்குளம் அருகே மணல் சரிந்து இருவர் பலி

ஆலங்குளம் அருகே மணல் சரிந்து இருவர் பலி

ஆலங்குளம் அருகே மணல் சரிந்து இருவர் பலி

ADDED : அக் 08, 2011 01:13 AM


Google News

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும்போது மணல் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாயினர்.

ஆலங்குளம் அருகேயுள்ள திருகன்குறிச்சி கிராமத்தில் ஈனசாமி (45) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை ஈனசாமி மற்றும் சிலர் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் மணல் சரிந்து விழுந்தது. இதில் ஈனசாமி (45), அதே ஊரை சேர்ந்த இசக்கிமுத்து (21) ஆகியோர் மணல் சரிவில் சிக்கி கொண்டனர்.உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மணல் சரிவில் இருந்து மீட்டு ஆலங்குளத்தில் இருந்து சென்ற 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் இறந்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us