Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் தேர்தல் விதி மீறி ரோடு பணி ஜரூர்

ராமநாதபுரத்தில் தேர்தல் விதி மீறி ரோடு பணி ஜரூர்

ராமநாதபுரத்தில் தேர்தல் விதி மீறி ரோடு பணி ஜரூர்

ராமநாதபுரத்தில் தேர்தல் விதி மீறி ரோடு பணி ஜரூர்

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் தேர்தல் விதிகளை மீறி தொடர்ந்து பல வார்டுகளில் நடக்கும் ரோடு பணிகளால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி இரண்டாவது வார்டில், கடந்த சில தினங்களுக்கு முன் சிமென்ட் ரோடு அமைக்கும் பணி நடந்தது. இதை தி.மு.க.,வேட்பாளர் சாதகமாக்கி கொள்கிறார் என்ற சர்ச்சை எழுந்ததால், அவசரமாக பணி நிறுத்தப்பட்டது. நகராட்சி அதிகாரிகள், 'ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட பணிகள்தான் தற்போது நடக்கிறது' என கூறினர். ஆனால் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளபோது ரோடு பணி நடந்தால் அது சிலருக்கு சாதகமாகிவிடும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து ' தேர்தல் முடியும் வரை ரோடு பணி செய்யகூடாது' என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சில வார்டுகளில் சில வேட்பாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் விதத்தில் மீண்டும் பணிகள் நடக்க துவங்கியுள்ளது. நகராட்சி அலுவலகம் பின்புறம், வெற்றிலைக்கார தெருவில் சிமென்ட் ரோடு பணி வேகமாக நடந்தது. நகராட்சி இன்ஜினியர் மதிவாணனிடம் கேட்டபோது, ''அனைத்து பணிகளையும் நிறுத்த கூறியுள்ளோம். வெற்றிலைக்காரதெருவில் பணி நடப்பது குறித்து தெரியாது. அதையும் உடனே நிறுத்த உத்தரவிடுகிறேன்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us