ADDED : செப் 03, 2011 02:37 AM
திசையன்விளை:திசையன்விளை அருகேயுள்ள மனகாவலபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தில்
பிரசங்கம் மற்றும் பாடல் போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு சுவிசேஷபுரம்
சேகரகுரு டேனியல் பால்துரை தலைமை வகித்தார்.
நெல்லை திருமண்டல பெருமன்ற
உறுப்பினர் இம்மானுவேல், முன்னாள் பொருளாளர் கோயில்பிச்சை முன்னிலை
வகித்தனர். மருதூர் மணிமாறன், வில்சன் டேவிட், புஷ்பராஜ் நடுவர்களாக
பணியாற்றினர். சேகர செயலாளர் சுவாமிதாஸ் வரவேற்றார்.போட்டிகளில் ஜெஸ்லின்
ஜானி, பெற்றிஸியா, கிரேசியா, அன்சிஸ் பரிசுகளை பெற்றனர். சேகர பொருளாளர்
துரைராஜ் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பெருமன்ற உறுப்பினர் திரவியராஜ்
செய்திருந்தார். தலைமையாசிரியர் ஞானராஜ் நன்றி கூறினார்.


