ADDED : ஆக 06, 2011 10:50 PM
ஒட்டன்சத்திரம்:புதிய காஸ் இணைப்பு பெற சில பொருட்களை வாங்க வேண்டும் என,
கட்டாயப்படுத்தும் ஏஜன்சிகளை கண்டித்து, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.ஒன்றிய தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.
இளைஞரணி தலைவர் ரவி,
முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி,
செயற்குழு உறுப்பினர் முனியப்பன் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர்
பழனிச்சாமி பேசினர். ஒன்றிய பொது செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.


