/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இலவச அரிசி : தவ்ஹித் ஜமாத் வேண்டுகோள்இலவச அரிசி : தவ்ஹித் ஜமாத் வேண்டுகோள்
இலவச அரிசி : தவ்ஹித் ஜமாத் வேண்டுகோள்
இலவச அரிசி : தவ்ஹித் ஜமாத் வேண்டுகோள்
இலவச அரிசி : தவ்ஹித் ஜமாத் வேண்டுகோள்
ADDED : ஆக 19, 2011 01:49 AM
திருநெல்வேலி:ரமலான் இலவச அரிசி (பித்ரா) விநியோகம் தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து அமைப்பின் செயலாளர் செய்யதுஅலி விடுத்துள்ள அறிக்கையில், 'முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது வழக்கம்.
நோன்பு காலங்களில் ஏற்பட்ட சிறுசிறு பாவங்களுக்கு பரிகாரமாக முஸ்லிம்கள் நோன்பு பெருநாள் தர்மம் (பித்ரா) வழங்குகின்றனர்.
அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, பேட்டை, பத்தமடை,சேரன் மகா தேவி,அம்பை, பொட்டல்புதூர், செங்கோட்டை, தென்காசி, கடைய நல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஏர்வாடி, தாழையூத்து, களக்காடு பகுதிகளில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு பித்ரா வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை முஸ்லிம்கள் பயன்படுத்தி பயனடையவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


