தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்
தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்
தீ குளிக்க வேண்டாம் கொலையாளிகள் வேண்டுகோள்
ADDED : ஆக 30, 2011 12:15 AM
வேலூர் : 'எங்களுக்காக யாரும் தீ குளிக்க வேண்டாம்' என, ராஜிவ் கொலையாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நளினியின் தாய் நர்சு பத்மா நேற்று வேலூர் சிறையில் முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்தித்து அரை மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த பத்மா, நிருபர்களிடம் கூறியதாவது: சிறையிலிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலைக்காக, யாரும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்.
குறிப்பாக, தீ குளிக்க வேண்டாம் என்றும், தாங்கள் மூவரும் விடுதலையாகி விடுவோம் என நம்புவதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக, மூவரும் பொது மக்களுக்கு, என் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பத்மா கூறினார்.


