ADDED : ஆக 03, 2011 01:32 AM
புதுச்சேரி : கூட்டுக்குரல் நாடக இயக்கம் சார்பில் ஆத்துவாய்க்கால்பேட் கிராமத்தில் குழந்தைகள் கூத்தரங்க நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுக்குரல் நாடக இயக்க உறுப்பினர் பிரதிப்குமார் வர வேற்றார். முருகையன் தலைமை தாங்கினார். அதேகொம் பின்னக நிர்வாகி லலிதா நோக்கவுரையாற்றினார். குழந்தைகளின் திற மைகளை வளர்க்கும் வகையில் நாடகம், கதை சொல்லுதல், களிமண் பொம்மை செய்தல், குழந்தைப் பாடல், கோலாட்டம், ஓவியம், வண்ணம் தீட்டுதல் போன்ற கலைகள் கற் றுக்கொடுக்கப்பட்டன. ராஜவேணி நன்றி கூறினார்.


