Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தோல் கழிவுõல் மாசடைந்த கங்கை நீரை குடித்த 2.5 லட்சம் குழந்தைகள் பலி

தோல் கழிவுõல் மாசடைந்த கங்கை நீரை குடித்த 2.5 லட்சம் குழந்தைகள் பலி

தோல் கழிவுõல் மாசடைந்த கங்கை நீரை குடித்த 2.5 லட்சம் குழந்தைகள் பலி

தோல் கழிவுõல் மாசடைந்த கங்கை நீரை குடித்த 2.5 லட்சம் குழந்தைகள் பலி

ADDED : ஆக 11, 2011 12:56 AM


Google News

ராமேஸ்வரம் : தோல் கழிவுகளால் மாசடைந்துள்ள கங்கை நீரை குடித்ததால் கடந்த 25 ஆண்டுகளில் 2.5 லட்சம் குழந்தைகள் இறந்தனர் என கங்கை பாதுகாப்பு குழுத்தலைவர் சுர்ஜித் தாஸ் குப்தா ராமேஸ்வரத்தில் நடந்த கங்கை நதி பாதுகாப்பு வேள்வியில் பங்கேற்ற போது தெரிவித்தார்.

இவர் மேலும் கூறியதாவது: ராஜிவ் பிரதமராக இருந்தபோது 1985 முதல் கங்கை நதி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அலகாபாத், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட மெட்டல், பிளாஸ்டிக், தோல் பதனிடுதல், டையிங் பேக்டரி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கங்கையில் கலப்பதால் நதிநீர் கெட்டு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இந்நீரை குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்.



இப்பகுதியை சுற்றியுள்ள கிணறுகளில் இருந்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீரினால் பயிர்களும் நச்சாக மாறி விவசாய நிலங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன. அறிவியல், ஆன்மிக ரீதியாக ஒன்றிணைந்து கங்கை நதியை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்து இதுகுறித்த விழிப்புணர்வை பாடத்தின் வாயிலாக கற்றுத்தரவேண்டும். ராமேஸ்வரத்தில் இன்று நடத்தியது போல் 12 ஜோதிர்லிங்கத் தலங்களிலும் கங்கையை காப்பதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. உலக அளவில் கங்கை நீரை புனிதமானதாக அறிவிக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்று திரட்டி விரைவில் டில்லியில் கங்கை நீர் பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் மாநாடு நடத்தப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us