Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பஸ்சில் ஏற ஓடும் மாணவர்கள் காயமடைவதால் பெற்றோர் நடுக்கம்

பஸ்சில் ஏற ஓடும் மாணவர்கள் காயமடைவதால் பெற்றோர் நடுக்கம்

பஸ்சில் ஏற ஓடும் மாணவர்கள் காயமடைவதால் பெற்றோர் நடுக்கம்

பஸ்சில் ஏற ஓடும் மாணவர்கள் காயமடைவதால் பெற்றோர் நடுக்கம்

ADDED : ஆக 11, 2011 01:01 AM


Google News

பரமக்குடி : போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஏற ஓடிச்செல்லும் மாணவர்கள் கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலை கண்டால் ஒவ்வொரு பெற்றோரின் மனமும் ஒரு நிமிடம் பயத்தில் உறையும். இதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் போதிய இடவசதியின்றி உள்ளது. பஸ்கள் அனைத்தும் குறுக்கும், நெடுக்குமாக இடியாப்ப சிக்கலில் ஊர்கின்றன. மாலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று திரும்புவோர் என கூட்டம் அதிகம். பஸ்சில் அமர்ந்து செல்வதற்காக நுழைவு வாயிலில் பஸ்கள் வரும்போதே ஓடிச்சென்று சீட் பிடிப்பது வாடிக்கை. இந்த கூட்டத்தோடு பள்ளிக்குழந்தைகளும் ஆபத்தை உணராமல் ஓடிச்சென்று ஏறுகின்றன. ஒவ்வொரு நாளும் தொடர்கதையாகி விட்ட இந்த சாகசத்தில் மாணவர்கள் படும் பாடு ஈரக்குலையை நடுங்கச் செய்யும். டிபன் பாக்ஸ் மற்றும் புத்தகப்பைகள் சிதறி விழுவதுடன், கூட்டத்தில் விழுந்து எழுபவர்களுக்கு கை, கால் சிராய்ப்பு போன்ற நிகழ்வுகளும் சாதாரணமானமாகி விட்டது. இதில் ஹைலைட்டாக வியாழக்கிழமை சந்தை நாட்களில் திருவிழா போல பஸ் ஸ்டாண்டை மக்கள் கூடுகின்றனர். பாதுகாப்பிற்கு போலீசார் இருக்காதது வேதனை. எனவே பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம், மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, பிளாட்பார கடைகளை அகற்றி பயணிகள் மற்றும் பஸ்கள் நிறுத்த போதிய இடம் ஏற்படுத்த நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us