/உள்ளூர் செய்திகள்/மதுரை/பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவுபொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
பொட்டுசுரேஷ் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு : தி.மு.க., நிர்வாகிகள் தலைமறைவு
மதுரை : மதுரையில் ரூ.51 லட்சம் மதிப்புள்ள இடத்தை மிரட்டி அபகரித்ததாக, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு), நகர துணைசெயலாளர் உதயகுமார் உட்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், பொட்டு சுரேஷ், உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சூடம்மணி, கே.கே.நகர் தொழிலதிபர் மாணிக்கம், பாலமுருகன், ரவிக்குமார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 109 (குற்றத்திற்கு உடந்தை), 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 323 (தன்னிச்சையாக காயம் விளைவித்தல்), 506 ( மிரட்டல்) உட்பட 6 பிரிவுகளின் கீழும், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணிக்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். முதலாவது மாஜிஸ்திரேட் முத்துக்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். போலீசார் கூறுகையில், ''கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் உதயகுமார், சூடம்மணி பங்கேற்காததால் அவர்கள் தலைமறைவாகி இருக்கலாம். மலேசியாவில் சில மாதங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளில் உதயகுமார் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கிறோம்,'' என்றனர்.