ADDED : ஜூலை 25, 2011 11:05 PM
பண்ருட்டி : மோட்டார் பைக் மோதியதில் ஒருவர் பலியானார்.பண்ருட்டி அடுத்த காட்டுவேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 35.
இவர் நேற்று முன்தினம் கொள்ளுக்காரன்குட்டை - குள்ளஞ்சாவடி சக்திவேல் வீட்டின் முன்பு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகாக்கொல்லையைச் சேர்ந்த குமார் ஓட்டி வந்த மோட்டார் பைக் மோதியதில் சிவக்குமார் இறந்தார்.


