/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவர் வீட்டில் திருடிய 2 பேர் கைதுதிருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
ADDED : ஜூலை 28, 2011 01:47 AM
தென்காசி : திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சாம்பவர்வடகரை அருகே திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி.
இவர் பஞ்.,தலைவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் யாரோ இவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு போன்றவற்றை திருடி சென்று விட்டனர். இதுபற்றி சாம்பவர்வடகரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த ரத்தினமிளகி மகன் இசக்கிமுத்து (19), சாம்பவர்வடகரையை சேர்ந்த முப்புடாதி (38), முத்துக்குமார் (25) நகை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து இசக்கிமுத்து, முப்புடாதியை போலீசார் கைது செய்தனர். முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.


