ADDED : ஆக 12, 2011 10:53 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையில் மிதந்த பெண் சடலத்தை
கைபற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை
கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் உருக்குலைந்த நிலையில் இருந்தது.
தகவல் அறிந்த பெல்லாரம்பள்ளி வி.ஏ.ஓ., பழனிசாமி கிருஷ்ணகிரி அணை
போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் எல்லப்பன் பெண் சடலத்தை
மீட்டு இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது
குறித்து விசாரிக்கிறார்.


