/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குன்னூரில் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்குன்னூரில் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
குன்னூரில் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
குன்னூரில் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
குன்னூரில் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஆக 25, 2011 01:52 AM
குன்னூர் : அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறைவை, குன்னூர் நகர,
ஒன்றிய அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
குன்னூர் நகர கழக செயலர் சத்தார்
தலைமையில் குன்னூர் பஸ் ஸ்டாண்டு அண்ணா சிலை முன்பு பட்டாசு வெடித்து,
மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அண்ணா சிலைக்கு, குன்னூர் நகராட்சி
கவுன்சிலர் மணி மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்ட செயலர் ஸ்ரீனிவாசன்,
ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில செயலர் ஜெயராமன், குன்னூர் நகராட்சி கவுன்சிலர்
சையது முபாரக், நிர்மல் சந்த் ஜெயின், ஜோமணி, சரவணகுமார், சந்திரா, குமார்
உட்பட பலர் பங்கேற்றனர். * குன்னூர் ஒன்றிய கழக செயலர் கலை செல்வன்
தலைமையில் கரன்சி பகுதியில் கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பாசறை மாவட்ட இணை செயலர் சிவகுமார், வெலிங்டன் கன்டோன்மென்ட் துணை தலைவர்
பாரதியார், வெலிங்டன் நகரிய செயலர் துரைராஜ், பரமசிவம், மகேந்திரன், செயலர்
சுப்ரமணி, பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


