சோழவந்தான் : சோழவந்தான் அக்ரஹாரம் சந்தானகோபாலகிருஷ்ணன் சுவாமி கோயிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் நேற்று முன்தினம் சுவாமி வீதிஉலா நடந்தது. இரவு கிருஷ்ணன் வெண்ணை திருடும் நிகழ்ச்சி நடந்தது. பின் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறி வெற்றிக்கனி எடுத்தல் நடந்தது. நேற்று உற்சவ சாந்தி, அஷ்டபதி, ராதா திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மகளிரணி சார்பில் திருமாங்கல்யகயிறு, குங்குமம், அன்னதானம் வழங்கப்பட்டது.


