Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கட்சி வலிமை குறையும்: அமைச்சர் சிதம்பரம் பேச்சு

கட்சி வலிமை குறையும்: அமைச்சர் சிதம்பரம் பேச்சு

கட்சி வலிமை குறையும்: அமைச்சர் சிதம்பரம் பேச்சு

கட்சி வலிமை குறையும்: அமைச்சர் சிதம்பரம் பேச்சு

ADDED : செப் 04, 2011 11:34 PM


Google News

காரைக்குடி:''உள்ளாட்சி தேர்தலில் செயல்பாடு குறைந்தால் கட்சியின் வலிமை குறையும்'' என, காரைக்குடியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.காரைக்குடியில் காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார்.அமைச்சர் பேசியதாவது: புதிய அரசு பதவியேற்று 100 நாட்களாகிறது.

அந்த அரசு புதுவித தீர்மானத்தை நிறைவேற்றி, பல நற்காரியங்களை செய்கிறது. சில திட்டங்கள் விமர்சிக்கும் வகையில் உள்ளன. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில், கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான், எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை பெறமுடியும். உள்ளாட்சி தேர்தலில் செயல்பாடு குறைந்து விட்டால், கட்சியின் வலிமையும் குறையும். இத்தேர்தலை பொறுத்தமட்டில் கட்சியின் சின்னம் ஒரு அடையாளம் தான். உள்ளூரில் சொந்த பலத்தில் தான் வெற்றி பெறமுடியும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us