Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சந்தேக "தீ'யால் மனைவி காயம்: கணவன் கைது

சந்தேக "தீ'யால் மனைவி காயம்: கணவன் கைது

சந்தேக "தீ'யால் மனைவி காயம்: கணவன் கைது

சந்தேக "தீ'யால் மனைவி காயம்: கணவன் கைது

ADDED : செப் 16, 2011 12:13 AM


Google News

தஞ்சாவூர்: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே உடையார் கோவில் மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ் (25) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி ஏஞ்சல் (23). இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஏஞ்சலின் நடத்தையில் புஷ்பராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு இதேபோல் தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த புஷ்பராஜ், சமாதானமாக செல்வதை போல படுக்கையை விரித்து படுத்துவிட்டார். நள்ளிரவில் எழுந்த புஷ்பராஜ், தூங்கி கொண்டிருந்த ஏஞ்சல் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். தீயினால் அலறித்துடித்த ஏஞ்சலை அக்கம்பக்கத்தில் உள்ளோர் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஏஞ்சல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து புஷ்பராஜை கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us