/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்புமொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு
மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு
மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு
மொடச்சூர் மாட்டு சந்தையில் அடிமாடுகள் சிறைபிடிப்பு
கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் மாட்டு சந்தையில் விற்கப்பட்ட அரிய வகை மாடுகளை அடிமாட்டுக்காக கேரளாவுக்கு அனுப்பக் கூடாது என, பொதுமக்கள் மாடுகளை சிறைப்பிடித்தனர்.
ஜெர்ஸி இன மாடுகள் 15 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரையும், கன்று குட்டிகள் 3,000 முதல் 7,000 ரூபாய் வரையும், கலப்பின பசுமாடுகள் 10 ஆயிரம் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரையும், கன்று குட்டிகள் 3,000 முதல் 8,000 ரூபாய் வரையும் விற்கப்பட்டது.
அவர்கள் கூறியதாவது: குஜராத் 'கிர்', ஆந்திரா 'ஓங்கோள்' மற்றும் தமிழகத்தில் 'காங்கேயம்' இன மாடுகள் அழிந்து வருகின்றன. அரிய வகை மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டுக்காக கொண்டு செல்லப்படுகிறது. அரிய வகை மாடுகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளை அடிமாட்டு விற்க விடமாட்டோம். எங்கள் உயிரை கொடுத்தாவது மாடுகள் கொண்டு செல்வதை தடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர். மாட்டு வியாபாரிகள், சம்பவ இடத்துக்கு வந்தனர். மாடுகளை அடிமாட்டுக்காக கொண்டு செல்வதில்லை என்றும், மாட்டு உரிமையாளரிடமே திருப்பி கொடுத்து விடுவதாக உறுதி அளித்ததின் பேரில், பொது மக்கள் கலைந்து சென்றனர். சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


