/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநகர பஸ் மோதி தந்தை, மகன் பலி : சேலையூர் அருகே பரிதாபம்மாநகர பஸ் மோதி தந்தை, மகன் பலி : சேலையூர் அருகே பரிதாபம்
மாநகர பஸ் மோதி தந்தை, மகன் பலி : சேலையூர் அருகே பரிதாபம்
மாநகர பஸ் மோதி தந்தை, மகன் பலி : சேலையூர் அருகே பரிதாபம்
மாநகர பஸ் மோதி தந்தை, மகன் பலி : சேலையூர் அருகே பரிதாபம்
ADDED : ஆக 07, 2011 12:57 AM
தாம்பரம் : தாம்பரம் - வேளச்சேரி சாலையில் வேகமாக வந்த மாநகர பஸ், பைக் மீது மோதியதில், தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பஸ்சில் பிரேக் சரியாக பிடிக்காததால், விபத்து நடந்ததாக போலீசார் கூறினர்.மேற்கு தாம்பரம், ஜீவா தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி, 65. தாம்பரம் - வேளச்சேரி சாலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் முரளி, 41, சென்னை மாநகராட்சியின் வேளச்சேரி மண்டல அலுவலகத்தில், வரி வசூலிக்கும் பணி செய்து வந்தார்.முரளி, தினமும் பைக்கில் பணிக்கு செல்லும் போது, தந்தையை அவர் பணிபுரியும் நிறுவனத்தில் விட்டுச் செல்வது வழக்கம். நேற்று காலை குமாரசாமியும், முரளியும் பணிக்கு செல்வதற்காக பைக்கில் புறப்பட்டனர். முரளி பைக்கை ஓட்டினார்; ஹெல்மெட் அணிந்திருந்தார்.தாம்பரம் - வேளச்சேரி சாலையில், இந்திய விமானப்படை சந்திப்பு சாலை அருகில் பைக் சென்று கொண்டிருந்த போது, கிழக்கு தாம்பரத்திலிருந்து தி.நகர் நோக்கிச் சென்ற தடம் எண், வி51 மாநகர பஸ், அதிவேகமாக வந்தது. பஸ் கட்டுப்பாட்டை இழந்து, முரளியின் பைக் மீது மோதியது.பைக்கில் இருந்து முரளியும், குமாரசாமியும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மாநகர பஸ் ஏறியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். டிரைவர் பஸ்சை நிறுத்தாமல், தொடர்ந்து இயக்கினார். கிறிஸ்துராஜா பள்ளி அருகே சென்ற கார் மீது மோதி, பஸ் நின்றது.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்த முரளி, குமாரசாமி ஆகியோர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பஸ்சில் பிரேக் சரியாக பிடிக்காததாலும், அதிவேகமாக வந்ததாலும் இந்த விபத்து நடந்ததாக, போலீசார் கூறினர். பஸ் டிரைவர் சவுந்தர்ராஜனை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


