Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/வடகொரியா, தென்கொரியா பதிலுக்குப் பதில் குண்டுவீச்சு

வடகொரியா, தென்கொரியா பதிலுக்குப் பதில் குண்டுவீச்சு

வடகொரியா, தென்கொரியா பதிலுக்குப் பதில் குண்டுவீச்சு

வடகொரியா, தென்கொரியா பதிலுக்குப் பதில் குண்டுவீச்சு

ADDED : ஆக 11, 2011 12:40 AM


Google News
சியோல் : வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் நேற்று, பதிலுக்குப் பதில் குண்டு வீசியதால், அப்பிராந்தியத்தில் பதட்டம் நிலவியது.

சீனாவுக்கும் கொரிய தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதி, 'மஞ்சள் கடல்' எனப்படும். இப்பகுதியில், தென்கொரிய எல்லைக்குள் நேற்று, வடகொரியா மூன்று குண்டுகளை வீசியது. உடன், தென்கொரியாவும் மூன்று குண்டுகளை, வடகொரிய கடற்பகுதிக்குள் வீசியது. இச்சம்பவத்தால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவியது. வடகொரியா எதற்காக குண்டுகளை வீசி பரபரப்பைக் கிளப்பியது எனத் தெரியவில்லை. கடந்தாண்டு நவம்பரில் இதேபோல், வடகொரியா வீசிய குண்டுகளால் தான், இருநாடுகளுக்கும் இடையில் பதட்டம் உருவானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us