சுவிஸ் வங்கியில் முதலீடு செய்ததாக ஆக., 9ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியான பட்டியல், தங்கள் மீதான அதிருப்தியில் வெளியிடப்பட்ட தகவல் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியும், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
'சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல்' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி, சிறிதும் உள்நோக்கமில்லாத செய்தியாகும். எவரையும் கறைபடுத்தும் நினைப்பும், 'தினமலர்' நாளிதழுக்கு கிடையாது. 'விக்கிலீக்ஸ்' தகவல் என்பது, ஈரோடு வரை பரவி, பரபரப்பை ஏற்படுத்தியதால், இது வெளிவந்திருக்கிறதே தவிர, தனிப்பட்ட விமர்சனமாகாது. இருந்த போதும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், இச்செய்தியால், மனம் வருத்தமுற்று இருப்பதாக தெரிவித்திருப்பதால், தினமலர் நாளிதழில், இச்செய்தி வெளியானதற்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்.


