/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முகையூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வுமுகையூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
முகையூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
முகையூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
முகையூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 04, 2011 11:07 PM
திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் 4 பேரும், 39 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.முகையூர் ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சி தலைவர் பதவிக்காக 366 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 5 பேரின் மனு நிராகரிக்கப் பட்டது. 94 பேர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.இதில் விளந்தை கிராமத்தில் எம்.ராஜகோபால், தண்டரை சுப்ரமணியன், சென்னகுணம் மயிலம்மாள், மேலந்தல் பாலகிருஷ்ணன் ஆகியோரை எதிர்த்து யாரும் மனு கொடுக்கவில்லை. இந்த நான்கு பேரும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.மொத்தம் உள்ள 489 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,711 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 பேரின் மனு நிராகரிக்கப் பட்டது. 162 பேர் மனுவை திரும்ப பெற்றனர். 39 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து 450 இடங்களுக்கு 1498 பேர் போட்டியிடுகின்றனர்.மூன்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப் பட்டது. 5 பேர் மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து 18 பேர் களத்தில் உள்ளனர். 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 192 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு மனு நிராகரிக்கப் பட்டது. 22 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். இதனையடுத்து 169 பேர் களத்தில் உள்ளனர்.


