Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடம் மாணவர்களுக்கு அழைப்பு

அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடம் மாணவர்களுக்கு அழைப்பு

அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடம் மாணவர்களுக்கு அழைப்பு

அரசு ஐ.டி.ஐ.,யில் காலி இடம் மாணவர்களுக்கு அழைப்பு

ADDED : ஆக 22, 2011 12:54 AM


Google News
கடலூர் : கடலூர் அரசு ஐ.டி.ஐ., யில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் செம்மண்டலத்தில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கம்ப்யூட்டர், டர்னர், பிளாஸ்டிக் பிராசசிங் பிரிவுகளில் பிற்பட்டோர் மற்றும் அருந்ததியினர் பிரிவினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது.

இந்த இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தொழில் பயிற்சிகளில் சேர விரும்புவோர் தங்களது கல்வி, வருமானம் மற்றும் சாதிச் சான்றுகளுடன் வரும் 30ம் தேதிக்குள் வேலை நாட்களில் நேரடியாகச் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us