ADDED : அக் 14, 2011 01:41 AM
விழுப்புரம் : மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் கருப்பசாமி,58. அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை விழுப்புரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். முத்தாம்பாளையம் அருகே எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


